சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு பண் - பியந்தைக்காந்தாரம் (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8 Audio: https://sivaya.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3 |
5.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு பண் - திருக்குறுந்தொகை (திருநெல்வாயில் அரத்துறை ) Audio: https://www.youtube.com/watch?v=zCMa42N_hJg |
7.003
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கல்வாய் அகிலும் கதிர் மா பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=R3l_wdYEp6w |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி )
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச் சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால் கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல், அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [1] |
ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான் சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால் வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல், ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [2] |
பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப் பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால் மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல், அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [3] |
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி, உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால் பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல், அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே | [4] |
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால் முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [5] |
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப் பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால் குரவ மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல், அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [6] |
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும் சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால் கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல், ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே | [7] |
செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற, அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான் கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல், அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [8] |
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால் மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை மேல், அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [9] |
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால் பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல், ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [10] |
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப் பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட உடல் உளானை, ஒப்பாரி இலாத எம் அடல் உளானை, அரத்துறை மேவிய சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [1] |
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை, விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே. | [2] |
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [3] |
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [4] |
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர் மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [5] |
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை, விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அதி ஒப்பானை, அரத்துறை மேவிய கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [6] |
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே. | [7] |
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர் மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அன் ஒப்பானை, அரத்துறை மேவிய தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே. | [8] |
காழியானை, கன விடை ஊரும் மெய் வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர் ஆழியான் பிரமற்கும் அரத்துறை ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே. | [9] |
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை, மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய அலை ஒப்பானை, அரத்துறை மேவிய நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.003  
கல்வாய் அகிலும் கதிர் மா
பண் - இந்தளம் (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி )
கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல் நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே! நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில் சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! . | [1] |
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நெறி வார் குழலார் அவர் காண, நடம் செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! வறிதே நிலையாத இம் மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை; நான் நிலையேன்; பொறி வாயில் இவ் ஐந்தினையும் அவியப் பொருது, உன் அடியே புகும் சூழல் சொல்லே!. | [2] |
புற்று ஆடு அரவம்(ம்) அரை ஆர்த்து உகந்தாய்! புனிதா! பொரு வெள் விடை ஊர்தியினாய்! எற்றே ஒரு கண் இலன், நின்னை அல்லால், நெல்வாயில் அரத்துறை நின்மலனே! மற்றே ஒரு பற்று இலன்; எம்பெருமான்! வண்டு ஆர் குழலாள் மங்கை பங்கினனே! அற்று ஆர் பிறவிக் கடல் நீந்தி ஏறி, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! . | [3] |
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல் நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே! நினைவார் மனத்தாய்! ஓடு புனல் கரை ஆம், இளமை; உறங்கி விழித்தால் ஒக்கும், இப் பிறவி; வாடி இருந்து வருந்தல் செய்யாது, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே!. | [4] |
உலவும் முகிலில்-தலை கல் பொழிய, உயர் வேயொடு இழி நிவவின் கரை மேல், நிலவும் மயிலார் அவர் தாம் பயிலும், நெல்வாயில் அரத்துறை நின்மலனே! புலன் ஐந்தும் மயங்கி, அகம் குழைய, பொரு வேல் ஓர் நமன் தமர் தாம் நலிய, அலமந்து மயங்கி அயர்வதன் முன், அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!. | [5] |
ஏலம்(ம்) இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நீலம் மலர்ப் பொய்கையில் அன்னம் மலி, நெல்வாயில் அரத்துறையாய்! ஒரு நெல்- வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது, அழகா! அலந்தேன், இனி யான்; ஆல(ந்)நிழலில் அமர்ந்தாய்! அமரா! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!. | [6] |
சிகரம் முகத்தில்-திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நிகர் இல் மயிலார் அவர் தாம் பயிலும், நெல் வாயில் அரத்துறை நின்மலனே! மகரக்குழையாய்! மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம், பிறவி இது தான்; அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! . | [7] |
திண் தேர் நெடுவீதி இலங்கையர் கோன் திரள் தோள் இருபஃதும் நெரித்து அருளி, ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால், பரஞ்சோதி! நின் நாமம் பயிலப் பெற்றேன்; அண்டா! அமரர்க்கு அமரர் பெருமான்! அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! . | [8] |
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்! நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன், ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!. | [9] |
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனைத் தேர் ஊர் நெடுவீதி நல் மாடம் மலி தென் நாவலர் கோன்-அடித்தொண்டன், அணி ஆரூரன்-உரைத்தன நல்-தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர்-அவர் ஆகி, ஓர் விண்முழுது ஆள்பவரே . | [10] |